உயர்நீதிமன்றங்கள் விசாரித்தலும், அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது – உச்சநீதிமன்றம்

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா இரண்டாவது அலையில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து அறிக்கை தர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஆக்சிஜன் விநியோகம், ரெம்டெசிவர் மருந்து கையிருப்பு, படுக்கை வசதி உள்ளிட்டவை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஆக்சிஜன் உள்ளிட்ட கொரோனா விவகாரங்களை உயர்நீதிமன்றங்கள் விசாரிப்பதையே நாங்கள் விரும்புகிறோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆக்சிஜன் தொடர்பான விவகாரங்களை உயர்நீதிமன்றம் விசாரிப்பதை தடுக்க விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், உயர்நீதிமன்றங்கள் விசாரித்தலும், நாங்களும் அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது என்றும் உயர்நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்கு வராத விவகாரங்களை நாங்கள் விசாரிக்கிறோம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

தேசிய அளவிலான பிரச்சனைகள் ஏற்படும்போது அதை முன்னின்று விசாரிக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பு என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வழக்குகளை உயர்நீதிமன்றங்கள் விசாரித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க போவதாக அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் ஆக்சிஜன் கையிருப்பை வெற்றிகரமாக கையாளுகின்றனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஆக்சிஜன் பிரச்சனை என்பது நாடு சார்ந்த பிரச்சனை என மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறியுள்ளார். ராணுவத்தின் வசம் உள்ள மருத்துவ வசதிகள் முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரோஹித் சர்மா சாதனையை நெருங்கிய ஹர்திக் பாண்டியா! அடுத்த போட்டியில் முறியடிப்பாரா?

ரோஹித் சர்மா சாதனையை நெருங்கிய ஹர்திக் பாண்டியா! அடுத்த போட்டியில் முறியடிப்பாரா?

புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…

1 hour ago

பட்ஜெட் 2025 தாக்கல் : ‘மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்’ த.வெ.க தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…

2 hours ago

தமிழ்நாடு மீது இருக்கின்ற வன்மத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த பட்ஜெட் – துணை முதல்வர் உதயநிதி காட்டம்

சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…

3 hours ago

மத்திய பட்ஜெட்டுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!

கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…

3 hours ago

‘இட்லி கடை’யில் அருண் விஜய்… மாஸ் போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…

3 hours ago

பட்ஜெட் 2025 தாக்கல்! ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை…நிபுணர்கள் சொன்ன கருத்து!

டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…

4 hours ago