உயர்நீதிமன்றங்கள் விசாரித்தலும், அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது – உச்சநீதிமன்றம்

Default Image

கொரோனா இரண்டாவது அலையில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து அறிக்கை தர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஆக்சிஜன் விநியோகம், ரெம்டெசிவர் மருந்து கையிருப்பு, படுக்கை வசதி உள்ளிட்டவை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஆக்சிஜன் உள்ளிட்ட கொரோனா விவகாரங்களை உயர்நீதிமன்றங்கள் விசாரிப்பதையே நாங்கள் விரும்புகிறோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆக்சிஜன் தொடர்பான விவகாரங்களை உயர்நீதிமன்றம் விசாரிப்பதை தடுக்க விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், உயர்நீதிமன்றங்கள் விசாரித்தலும், நாங்களும் அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது என்றும் உயர்நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்கு வராத விவகாரங்களை நாங்கள் விசாரிக்கிறோம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

தேசிய அளவிலான பிரச்சனைகள் ஏற்படும்போது அதை முன்னின்று விசாரிக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பு என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வழக்குகளை உயர்நீதிமன்றங்கள் விசாரித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க போவதாக அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் ஆக்சிஜன் கையிருப்பை வெற்றிகரமாக கையாளுகின்றனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஆக்சிஜன் பிரச்சனை என்பது நாடு சார்ந்த பிரச்சனை என மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறியுள்ளார். ராணுவத்தின் வசம் உள்ள மருத்துவ வசதிகள் முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
[File Image]
stock market budget 2025
nirmala sitharaman and M K Stalin
mkstalin
udit narayan kiss controversy
Gold Rate