பீகார் மாநிலம் ராஜ்கிர் மாவட்டத்தில் உள்ள சி.ஆர்.பி.எஃப் பயிற்சி மையம் உள்ளது.அந்த மையத்தின் துணை ஆய்வாளர் டி.கே.திரிபாதி. இவர் நேற்று பணியில் இருந்தபோது கான்ஸ்டபிள் அமோல் காரத்திடம் வெந்நீர் எடுத்து வருமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து உயர் அதிகாரி கூறியதால் அமோல் வெந்நீர் கொண்டு வந்து உள்ளார்.அவர் கொண்டு வந்த வெந்நீர் சூடாக இருந்ததால் குடித்து விட்டு திரிபாதி கோபத்தில் திட்டி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
கோபமடைந்த திரிபாதி , கான்ஸ்டபிள் அமோல் முகத்தில் சூடாக இருந்த வெந்நீரை ஊற்றி உள்ளார். இதனால் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் ஏற்பட்ட படுகாயம் காரணமாக அமோல் வலியால் துடித்து உள்ளார்.
பின்னர் அமோலை உடனடியாக மருத்துவமைக்கு அழைத்து சென்றனர்.இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறினர்.மேலும் வருகின்ற 10 ம் தேதி சம்பவம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் எனஅதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…