Supreme court of India - Delhi CM Arvind Kejriwal [File image]
டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் கடந்த மே 10ஆம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவால் இடைக்கால ஜாமீன் பெற்று இருந்தார். பின்னர் ஜாமீன் காலம் முடிந்து ஜூன் 2இல் திகார் சிறையில் சரணடைந்தார்.
இதனை அடுத்து, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அண்மையில், அமலாகாத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால், அதற்கு முன்னதகவே, இதே மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் சிபிஐயால் கைது செய்யப்பட்டு இருந்தார். அதானல் இடைக்கால ஜாமீனில் வெளியே வரமுடியாத நிலை உருவானது.
இதனால் சிபிஐ கைது செய்ததற்கு எதிராக கெஜ்ரிவால் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணையில், கெஜிரிவால் தரப்பு வழக்கறிஞர் சிங்வி வாதிடுகையில், இந்த மதுபான வழக்கு பதியப்பட்டு 8 மாத விசாரணை வரையில் கெஜ்ரிவாலை கைது செய்யவோ, விசாரணை செய்யவோ சிபிஐ நினைக்கவில்லை.
இந்த வழக்கில் சி.பி.ஐ.க்கு கைது செய்ய எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அமலாக்க வழக்கில் வெளியில் வரக்கூடாது என கூடுதல் இன்சூரன்ஸ் போல சிபிஐ கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக மூன்று விடுதலை (ஜாமீன்) உத்தரவுகள் உள்ளன.
கெஜிரிவால் அமலாக்கத்துறை விசாரணையில் இருக்கிறார். வெளியில் அவரால் இந்த வழக்குக்கு இடையூறு நேராது. வழக்கில் கெஜ்ரிவால் தனது அதிகாரத்தை பயன்படுத்த மாட்டார் என்பதை உச்சநீதிமன்றம் இன்னும் கருதவில்லை. கெஜ்ரிவாலின் நேர்மையை உச்சநீதிமன்றம் சோதிக்கிறது. ஆனால் இடைக்கால ஜாமீன் முடிந்ததும் ஜுன் 2 நேர்மையாக கெஜிரிவால் சரணடைந்தார்.
சிபிஐ கைது தொடர்பான நீதித்துறை விளக்கம் எங்கே.? அந்த விளக்கம் கெஜ்ரிவாலுக்கு கொடுக்கப்படவில்லை. ஜாமீன் வழங்குவதற்கு முன்னாதாக் சிபிஐ கைது ஏன்? இது உண்மையில் தேவையா? என்ன நோக்கத்திற்காக கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார் .? என பல்வேறு கேள்விகளை கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…
சென்னை : சிக்கல்களை தாண்டி விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச்…
சென்னை : மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவின்படி, வரும் மே 1, 2025 முதல், மாதாந்திர இலவச பரிவர்த்தனை…
குவஹாத்தி : இன்று மார்ச் 30, 2025 அன்று நடைபெறவுள்ள ஐபிஎல் 2025 தொடரின் 11-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்…
சென்னை : ரம்ஜான் பண்டிகை வந்துவிட்டிட்டது என்றாலே ஆடுகள் விற்பனை என்பது அமோகமாக நடைபெறும். அதன்படியே இந்த ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு…
விசாகப்பட்டினம் : கடந்த ஆண்டு எப்படி அதிரடியாக ஹைதராபாத் அணி விளையாடியதோ அதைப்போல தான் இந்த சீஸனும் விளையாடி வருகிறது. உதாரணமாக…