கோவிஷீல்ட் 2-3 மாத இடைவெளிக்குப் பிறகு கொடுக்கப்பட்டால் 90% பயனுள்ளதாக இருக்கும்: அடார் பூனவல்லா
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட தி லான்செட்டில் ஒரு ஆய்வு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அஸ்ட்ராஜெனெகா உருவாக்கிய தடுப்பூசி, அளவுகளுக்கு இடையில் ஒரு மாத இடைவெளியுடன் 70 சதவீத செயல்திறனைக் கொண்டுள்ளது என்று கூறியிருந்தது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, புனேவில் சீரம் தயாரிக்கும் அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 90 சதவீதம் பயனை தரும் என்று கூறியுள்ளார்.
இரண்டு தடுப்பூசிகளுக்கான காலா இடைவேளையை சுமார் 2.5-3 மாதங்களால் அதிகரித்தால் கோவிஷீல்ட் தடுப்பூசியின் செயல்திறன் 90 சதவீதமாக உயரும் என்று பூனவல்லா தெரிவித்துள்ளார்.பூனவல்லாவின் கூற்றுப்படி, தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கத் தொடங்குகிறது.
மற்ற நாடுகளில் நடத்தப்பட்ட கோவிஷைல்ட் சோதனைகள் முதல் டோஸ் வழங்கப்பட்டு ஆறு வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டபொழுது தடுப்பூசி செயல்திறன் அதிகரித்திருப்பதைக் கண்டறிந்த பின்னர் தான் தேசிய நிபுணர்கள் குழு பரிந்துரைத்தது.
தடுப்பூசிக்கான கால இடைவெளி குறித்த தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரையின் பின்னர், கடந்த மாதம், கோவிஷீல்டின் இரண்டு டோஸ் விதிமுறைகளுக்கு இடையிலான இடைவெளியை மத்திய அரசு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…