பிரதமர் நரேந்திர மோடி இன்று சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை திருத்துவது குறித்து அரசாங்கம் விரைவில் ஒரு முடிவை எடுக்கும் என்று கூறினார்.
உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75 வது ஆண்டு விழாவில் ரூ .75 மதிப்புள்ள நினைவு நாணயத்தை வெளியிடுவதற்கான காணொளி காட்சி மூலம் உரையாற்றிய மோடி, கடந்த ஆறு ஆண்டுகளில் அரசாங்கம் மேற்கொண்ட பல முயற்சிகளால், கல்வியில் சிறுமிகளின் மொத்த சேர்க்கை விகிதம் நாட்டில் முதன்முறையாக சிறுவர்களை விட அதிகமாகிவிட்டது என்று பிரதமர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 11 கோடி கழிப்பறைகளை அரசாங்கம் கட்டியுள்ளது. அதே போல், ஏழை பெண்களுக்கு ரூ 1 ரூபாயில் சானிட்டரி பேட்களை வழங்குவதையும் மோடி குறிப்பிட்டார்.
இதனையடுத்து, மகள்களுக்கு திருமணத்தின் சிறந்த வயது எதுவாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க ஒரு முக்கியமான கலந்துரையாடல் நடந்து வருகிறது. அந்த வகையில், பெண்களிடமிருந்து கடிதங்களைப் பெற்று வருவதாகவும், குழுவின் அறிக்கை குறித்து அரசாங்கம் முடிவெடுக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
இதற்கிடையில், திருமணத்திற்கு பெண்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், ஆண்களின் 21 வயது ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…