குஜராத் மாநிலத்தில் உள்ள மெஹசானா மாவட்டத்தில் உள்ள லங்னாஜ் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணி செய்து வந்தவர் அர்பிதா சவுத்ரி.இவர் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வந்து உள்ளார்.
இந்த டிக் டாக்கில் மற்றவர்களை போல தாமும் வீடியோ செய்து வெளியிட வேண்டும் என எண்ணி உள்ளார்.இதை தொடர்ந்து பெண் காவலர் அர்பிதா சவுத்ரி காவல் நிலையத்தில் உள்ள லாக் அப்பில் சீருடை இல்லாமல் இந்தி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு உள்ளார்.
அர்பிதா சவுத்ரி குத்தாட்டம் போட்ட வீடியோவை டிக் டாக் செயலியில் பதிவு செய்து உள்ளார்.இந்த வீடீயோவை பார்த்த பலர் காவல் நிலையத்தில் ஒரு காவலர் பொறுப்பு இல்லாமல் இப்படியா ஆட்டம் போடுவது? என கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் பெண் காவலர் அர்பிதா சவுத்ரி இடைநீக்கம் செய்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் மஞ்சிதா உத்தரவு விட்டார்.இது குறித்து துணை கண்காணிப்பாளர் மஞ்சிதா கூறுகையில் , பணி நேரத்தில் சீருடை இல்லாமல் இருந்து உள்ளார்.மேலும் காவல் நிலையத்தில் வீடியோ எடுத்து உள்ளார்.
அது மட்டுமல்லாமல் காவலர்கள் பின்பற்ற வேண்டிய விதிகளை மீறி உள்ளார்.அதனால் பெண் காவலர் அர்பிதாவை இடைநீக்கம் செய்து உள்ளதாக கூறினார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…