ஏழை மாணவனின் கனவை நினைவாக்க ஜனாதிபதி கொடுத்த பரிசு!

Published by
Rebekal

ஏழை இஸ்லாமிய மாணவர் ஒருவருக்கு பக்ரீத் பரிசாக பந்தய சைக்கிளை பரிசாக வழங்கியுள்ளார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானி என்னும் இடத்தை சேர்ந்த ஒரு ஏழை இஸ்லாமிய மாணவர் ரியாஸ் என்பவருக்கு பக்ரீத் பரிசாக பந்தய சைக்கிளை வழங்கியுள்ளார் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். ஜனாதிபதி மாளிகையில் வைத்து குடியரசுத் தலைவர் கொடுத்த சைக்கிளை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார்.  ரியாசின் வாழ்க்கை வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாகவும், அவனது வாழ்க்கை பிறருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் எனவும் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.

ரியாஸ் பற்றி குடியரசு தலைவர் கூறும்பொழுது, டெல்லி சர்வோதயா வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ரியாசின் தந்தை சமையல்காரராக மிக குறைந்த ஊதியத்துடன் வேலை பார்ப்பவர். இவருக்கு இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரரும் உள்ளார். எனவே குடும்ப வறுமை காரணத்தால் ரியாஸ் தன்னுடைய படிப்பை பார்த்துக் கொண்டிருந்தாலும், ஓய்வு நேரத்தில் பாத்திரம் கழுவி குடும்பத்தை நடத்தி வருகிறார். ஆனால் ரியாசுக்கு முழுவதும் சைக்கிள் ஓட்டுவது ஆர்வம்.

2017 ஆம் ஆண்டு டெல்லி மாநில சைக்கிள் ஓட்டுதலில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவரும், தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் நான்காம் இடம் பிடித்தவர் ரியாஸ். இவ்வளவு சாதனைகள் செய்திருந்தாலும் சைக்கிள் சொந்தமாக கிடையாது. இந்திராகாந்தி பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் இவர், பயிற்சிக்கு வரும் பொழுதெல்லாம் வாடகைக்கு அல்லது கடனுக்குத்தான் சைக்கிளை வாங்கி வந்து பயிற்சி எடுத்து வருகிறார். ரியாஸின் கனவை நனவாக்க தற்பொழுது உடனடியாக தேவை சைக்கிள் தான் என்பதை ஊடக வாயிலாக அறிந்து தான் குடியரசுத் தலைவர் இந்த சைக்கிளை பரிசளித்தளித்ததாக கூறி உள்ளார். மேலும் ரியாஸின் வாழ்க்கை தன்னம்பிக்கைக்கு உரியது, அவர் வாழ்வின் மிகப்பெரிய வெற்றியைப் பெறவேண்டும் எனவும் ராம்நாத் கோவிந்த் வாழ்த்தியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

8 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

16 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago