ககன்யான் 2022ஆம் ஆண்டுதான் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இந்தியா 2022-ம் ஆண்டு விண்வெளிக்கு 4 வீரர்களை அனுப்ப திட்டமிட்டு இதற்கு ககன்யான் என பெயரிடப்பட்டது.இந்த திட்டத்தை இந்தியா சிறப்பாக நிறைவேற்ற ரஷ்யாவும் உதவ முன்வந்தது.இதனால் வீரர்களுக்கு பயிற்சி இந்திய நிறுவனமான இஸ்ரோ ,ரஷ்யாவின் Glavkosmos நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.இந்த நிறுவனம் இந்திய வீரர்கள் 4 பேரும் 25 சதவீத பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்தது.ரஷ்யாவில் கொரோனா தடுப்பு நடைமுறை இந்திய விண்வெளி வீரர்களுக்கு உறுதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் , இவர்களுக்கான அடுத்த கட்டப் பயிற்சிகள் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில் இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில்,ககன்யான் 2022-ஆம் ஆண்டுதான் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. போதிய கால அவகாசம் உள்ளதால் இந்த திட்டம் தாமதம் அடையாது என்றும் ஊரடங்கு வாபஸ் பெறும் பட்சத்தில்தான் இஸ்ரோவின் அடுத்த கட்ட ஏவுதல் திட்டங்கள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…