அசாமில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 21 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
அசாமில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 21 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது மேற்பட்ட 4.6 லட்ச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து பைபர் படகுகள் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கித் தவிப்போரை மீட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் மழை, வெள்ளத்தால் 4.6 லட்ச மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 142 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 19,000க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் வெள்ளம் பாய்ந்ததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
259 கிராமங்களில் மட்டும் 99,116 பேர் பாதிக்கப்பட்டுள்ள தேமாஜி தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிஸ்வநாத் 70 கிராமங்கள், பார்பேட்டா 162 கிராமங்கள், மோரிகான் 90 கிராமங்கள், கோல்பாரா 96 கிராமங்கள், திப்ருகார் 119 மற்றும் டின்சுகியா 136 கிராமங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்களுடன் விலங்குகள் மற்றும் விவசாய நிலங்களிலும் பெரும் பாதிப்பில் உள்ளது. இதுவரை 2,49,288 வீட்டு விலங்குகள் மற்றும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் வெள்ளநீரால் அடித்து செல்லப்பட்டது என தகவல் வெளியானது. இந்த வெள்ளத்தில் இறப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…