குழந்தைகளின் படிப்புக்காக தாலியை விற்று டிவி வாங்கிய தாயின் நெகிழ்ச்சி செயல்

Published by
Rebekal

குழந்தைகளின் படிப்புக்காக தனது தாலியை விற்று டிவி வாங்கிய தாயின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் மாதம் முதலே பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. மாணவர்களின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலமாக பாடங்களை ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றன. ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை கருதி தமிழக அரசு தொலைக்காட்சி மூலம் பாடங்களை கற்பிக்க வழிவகை செய்துள்ளது.

இதனை கர்நாடக அரசும் பின்பற்றுகிறது. இருந்தாலும் தொலைக்காட்சி கூட இல்லாத சில வீடுகளும் இருக்கின்றன என புகார்கள் எழுந்தன. இந்நிலையில் கர்நாடகத்தில் உள்ள கடக் எனும் மாவட்டத்தில் உள்ள ராடார் நாகனூர் எனும் கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி என்பவர் தினசரி கூலி செய்து தனது இரு குழந்தைகளையும் பராமரித்து வருபவர். பள்ளியிலிருந்து கஸ்தூரியை தொடர்பு கொண்ட ஆசிரியர்கள் டிவி வழியாக குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கப்படும் என கூறியதை கேட்டு தனது  கழுத்தில் இருந்த தனது தாலியை இருபதாயிரம் ரூபாய்க்கு விற்று அதில் 14 ஆயிரம் ரூபாய்க்கு டிவி வாங்கி உள்ளார் கஸ்தூரி.

இதுகுறித்துக் அவர் கூறுகையில், எனது குழந்தைகள் பாடம் கற்பதற்காக உறவினர்கள் வீட்டுக்கு அனுப்பு எனக்கு விருப்பமில்லை. டிவி அத்தியாவசியமான ஒன்று தான், எனவே வேறு வழியில்லாமல் எனது தாலியை விற்று நான் குழந்தைகளுக்காக டிவி வாங்கி உள்ளேன். எனது கணவருக்கும் தற்பொழுது வேலை இல்லை என அவர் கூறியுள்ளார். குழந்தைகளுக்காக தாய் செய்துள்ள இந்த அர்ப்பணிப்பு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago