குழந்தைகளின் படிப்புக்காக தனது தாலியை விற்று டிவி வாங்கிய தாயின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் மாதம் முதலே பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. மாணவர்களின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலமாக பாடங்களை ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றன. ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை கருதி தமிழக அரசு தொலைக்காட்சி மூலம் பாடங்களை கற்பிக்க வழிவகை செய்துள்ளது.
இதனை கர்நாடக அரசும் பின்பற்றுகிறது. இருந்தாலும் தொலைக்காட்சி கூட இல்லாத சில வீடுகளும் இருக்கின்றன என புகார்கள் எழுந்தன. இந்நிலையில் கர்நாடகத்தில் உள்ள கடக் எனும் மாவட்டத்தில் உள்ள ராடார் நாகனூர் எனும் கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி என்பவர் தினசரி கூலி செய்து தனது இரு குழந்தைகளையும் பராமரித்து வருபவர். பள்ளியிலிருந்து கஸ்தூரியை தொடர்பு கொண்ட ஆசிரியர்கள் டிவி வழியாக குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கப்படும் என கூறியதை கேட்டு தனது கழுத்தில் இருந்த தனது தாலியை இருபதாயிரம் ரூபாய்க்கு விற்று அதில் 14 ஆயிரம் ரூபாய்க்கு டிவி வாங்கி உள்ளார் கஸ்தூரி.
இதுகுறித்துக் அவர் கூறுகையில், எனது குழந்தைகள் பாடம் கற்பதற்காக உறவினர்கள் வீட்டுக்கு அனுப்பு எனக்கு விருப்பமில்லை. டிவி அத்தியாவசியமான ஒன்று தான், எனவே வேறு வழியில்லாமல் எனது தாலியை விற்று நான் குழந்தைகளுக்காக டிவி வாங்கி உள்ளேன். எனது கணவருக்கும் தற்பொழுது வேலை இல்லை என அவர் கூறியுள்ளார். குழந்தைகளுக்காக தாய் செய்துள்ள இந்த அர்ப்பணிப்பு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
சென்னை : மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கியது. 100 உயர பிரமாண்ட கொடியை ஏற்றிவைத்த ஸ்டாலின்,…
சென்னை : தமிழ்நாட்டில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 எம்.பி.க்களின் மாநிலங்களவை பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி உடன்…
சென்னை : ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். ராஜ்யசபா வேட்பாளர்களாக அக்கட்சியின்…
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…