18 வயதிற்கு மேற்பட்டோர் இன்று முதல் தடுப்பூசி…! சில மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கவில்லை…!

Published by
லீனா

தமிழகம், கர்நாடகம், மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தினால் இந்த தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கவில்லை.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அரசு மக்களை தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தி வருகிறது.

18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி 

இளம் வயதினரை கொரோனா வைரசின் இரண்டாவது அலை அதிகமாகத் தாக்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 18 வயதான அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தகுதியானவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், மே 1ஆம் தேதி முதல் மூன்றாவது கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,  நேரடியாக தடுப்புசி மையங்களுக்கு செல்ல அனுமதி கொடுக்கவில்லை.

தடுப்பூசிக்கு முன்பதிவு 

நேரடியாக தடுப்பூசி மையத்திற்கு சென்று தடுப்பூசி போட அனுமதி வழங்கப்படாத நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் கோவின் தளம் அல்லது ஆரோக்கிய சேது செயலியில் முன் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாடு முழுவதும், நேற்று காலை வரையில் 2.45 கோடி பேர் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பதிவு செய்துள்ளனர்.

தடுப்பூசி போடுவதில் சிக்கல் 

இந்நிலையில் இன்று நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழகம், கர்நாடகம், மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தினால் இந்த தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கவில்லை என கூறப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago