வரும் 26-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு…! குஜராத் அரசு அனுமதி…!

Default Image

குஜராத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், வரும் 26-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தற்போது அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் குஜராத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் வரும் 26-ம் தேதியில் இருந்து 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் 50 சதவீத இருக்கைகளுடன் பள்ளிகள் செயல்படலாம் என்றும், வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் பெற்றோரின் சம்மதத்தை பெற்று வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்