மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.
5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவித்த முதல் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகவும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தீவிரமாக மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் நடந்து வந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளதால் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. காலில் அடிப்பட்ட போதும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டம் – மார்ச் 27, 2-ம் கட்டம் -ஏப்ரல் 1 , 3-ம் கட்டம்- ஏப்ரல் 6, 4-ம் கட்டம்-ஏப்ரல் 10, 5-ம் கட்டம்-ஏப்ரல் 17, 6-ம் கட்டம்-ஏப்ரல் 22, 7-ம் கட்டம்- ஏப்ரல் 26, 8-ம் கட்டம்-ஏப்ரல் 29-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதி 47 தொகுதிகளுக்கும், 2-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 39 தொகுதிகளுக்கும், 3-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி 40 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மட்டும் மே 2-ஆம் தேதி ஒரே நாளில் ஐந்து மாநிலங்களுக்கும் நடைபெற உள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…