இனி புதிதாக யாருக்கும் கோவாக்சின் தடுப்பூசிக்கான முதல் டோஸ் செலுத்தப்படமாட்டாது – டெல்லி!

Published by
Rebekal
  • டெல்லியில் கோவாக்சின் தடுப்பூசிக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
  • எனவே புதிதாக இனி யாருக்கும் கோவாக்சின் முதல் டோஸ் செலுத்தப்படமாட்டாது என கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியா முழுவதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் விதமாக தடுப்பூசி போடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் பலரும் தற்போது தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தலைநகர் டெல்லியிலும் கொரோனா பாதிப்பின் அளவு அதிகம் காணப்பட்டதால், டெல்லியிலுள்ள மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது டெல்லியில் கோவாக்சின் தடுப்பூசி குறைவாக இருப்பதால் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை கோவாக்சின் வழங்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.

அதாவது மே மாதம் கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு இந்த மாதத்தில் இரண்டாம் தவணை எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு மட்டும் இனி இரண்டாம் தவணையாக கோவாக்சின் செலுத்தப்படும் எனவும், முதல் தவணையாக இனி யாருக்கும் தடுப்பூசியை கொடுக்க வேண்டாம் எனவும் டெல்லியில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் அறிவுறுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

3 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

11 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

24 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago