இந்தியாவில் முதன் முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்ற 3 அடி சாதனை மனிதர்!

Published by
Rebekal

இந்தியாவில் முதன் முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்று 3 அடி கொண்ட மாற்றுத்திறனாளி சாதனை படைத்துள்ளார். 

இரண்டு கை மற்றும் கால்கள் நலமுடன் இருக்கும் மனிதர்களே வாழ்வில் சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் வாழ்ந்து வரும் நிலையில், தங்களுக்கு உடலளவில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலும் அதை தங்கள் நிறைகளாக எடுத்துக் கொண்டு சாதனை படைத்து வரக்கூடிய மாற்று திறனாளிகளை நிச்சயம் நாம் பாராட்டியாக வேண்டும். அந்த வகையில் ஹைதராபாத்தில் வசித்து வரக்கூடிய ஷிவ்பால் எனும் நபர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட பல சிரமங்களை எதிர்கொண்டு இந்தியாவிலேயே ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் குள்ள மனிதர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும் இவரது இந்த சாதனை தெலுங்கு புக் ஆப் மற்றும் லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 42 வயதுடைய ஷிவ்பால் சுமார் 3 அடி உயரம் மட்டுமே உடையவர் என கூறப்படுகிறது. இவர் பட்டப் படிப்புகளும் முடித்துள்ளாராம்.

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட பொழுது தன்னை பார்த்து மக்கள் கேலி செய்ததாகவும், ஆனால் தற்பொழுது ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளது மட்டுமல்லாமல் சாதனை புத்தகத்திலும் இவர் இடம் பெற்றுள்ளதால் தன்னை பார்த்து கேலி செய்தவர்கள் எல்லாம் வாயடைத்துப் போய் உள்ளார்கள் எனவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசு -பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!

வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசு -பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!

ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான்  அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…

10 minutes ago

கட்டாய கடன் வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை! சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…

47 minutes ago

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு எதிரொலி! பள்ளிக்கு சீல்!

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…

1 hour ago

Bye Bye ஸ்டாலின்.., 2026-ல் திமுகவுக்கு பெரிய ‘ஓ’! இபிஎஸ் கடும் விமர்சனம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

2 hours ago

பொள்ளாச்சி வழக்கு : நீதிபதி மாற்றம்.. தீர்ப்பு தேதியில் எந்த மாற்றமா.?

பொள்ளாச்சி : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…

2 hours ago

தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு! பள்ளி தாளாளர் கைது!

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…

3 hours ago