தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட பெண் சிறுத்தை ‘தக்ஷா’ மரணம்.!!

தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட தக்ஷா என்ற பெண் சிறுத்தை குனோ நேஷனல் பூங்காவில் உயிரிழந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் வைக்கப்பட்டிருந்த தக்ஷா என்ற பெண் சிறுத்தை, பூங்காவிற்குள் மற்ற சிறுத்தைகளுடன் நடந்த சண்டையிட்ட நிலையில், உயிரிழந்தது.
இந்தியாவில் சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியாவில் இருந்து கொண்டுவரட்ட 12 சிறுத்தைகளை குனோ வனவிலங்கு சரணாலயத்தில் பிரதமர் மோடி திறந்து விட்டார்.
இந்நிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியாவில் இருந்து கொண்டுவரட்ட 12 சிறுத்தைகளில் ஏற்கனவே 2 சிறுத்தைகள் உயிரிழந்த நிலையில், தற்போது தக்ஷா என்ற பெண் சிறுத்தை இறந்த சண்டையிட்ட நிலையில், காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த பெண் சிறுத்தையின் பிரேதப் பரிசோதனையை கால்நடை மருத்துவக் குழுவினர் விதிகளின்படி செய்து வருகின்றனர்.