உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து சுதேசியை பிரபலப்படுத்தி வரும் மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து, ‘ஏசி’ இயந்திரங்கள் இறக்குமதி செய்வதற்கு தற்போது தடை விதித்து உள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க, மத்திய அரசு, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் சுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து, இதில், ‘ஸ்பிலிட்’ உள்ளிட்ட ஏ.சி., வகைககளை, இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு நேற்று தடை விதித்தது.இதற்கான அறிவிப்பை, மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், டி.ஜி.எப்.டி., எனப்படும், வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம் வெளியிட்டது. உள்நாட்டு சந்தையில், 36 – 44 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, ‘ஏசி’க்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை, அதிக அளவில் விற்பனை ஆகின்றன. இதை தடுத்து, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சென்னை : கம்பேக் என்றால் இப்படி இருக்கவேண்டும் என தமிழ் சினிமாவில் அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் …
சென்னை : இன்று ஏப்ரல் 1 தமிழ் மாதமான சித்திரை 1ஆம் தேதியை, ஒரு பகுதியினர் தமிழ் புத்தாண்டு தினமாகவும், ஒரு…
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…
திருச்சூர் : நட்புக்கு ஒண்ணுன்னா நண்பர்கள் ஓடி வந்துருவாங்க., எனும் சொற்றொடர்களை அடிக்கடி கேட்டிருப்போம். அதற்கு ஏற்ற பல சம்பவங்களும்…
சென்னை : இன்று ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழ்…
ஜெய்ப்பூர் : நேற்றைய 2 ஐபிஎல் போட்டிகளில் பிற்பகல் 3.30 மணி ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்…