மத்திய அரசு மத அரசியல் செய்கிறது, அவர்களுக்கு ஏழைகளை பற்றி கவலை இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய கபில் சிபல் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் பாஜக தலைவர்கள் உண்மையான உலகத்தில் இல்லை எனவும், அதன் காரணமாகத்தான் ஏழைகளின் வருமானம் உயர்ந்து இருப்பதாக பாஜக கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு மாதத்திற்கு ஆறாயிரம் சம்பாதிக்க கூடிய ஒருவர், மாதம் இருபத்தைந்தாயிரம் சம்பாதிப்பதாக கூறியிருக்கிறார்.
இது மிகவும் கொடூரமான ஒரு காமெடியாக தான் பார்க்க முடியும். பாஜக மற்றும் அந்த கட்சியை சார்ந்த தலைவர்களின் வருமானம் மட்டுமே தற்போது உயர்ந்திருப்பதாகவும், பொது மக்களின் வருமானம் உயரவில்லை மாறாக எரிபொருள் விலையும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் தான் உயர்ந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
மத அரசியல் மட்டுமே செய்யக்கூடிய மத்திய அரசு ஏழைகள் பற்றி கவலை கொள்வதில்லை எனவும், இந்த அரசை மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள் எனும் நம்பிக்கை தனக்கு உள்ளது எனவும், வரவுள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இருந்து இது தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…