மைனர் மகளை பாலியல் வன்கொடுமை செய்த 34வயதான நபரை, அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கைது செய்தனர்.
உலகம் முழுவதும் பல இடங்களில் சிறுமிகள் உட்பட பலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், தற்போது மும்பையில் உள்ள புனேவில் 34 வயதான நபர் தனது மைனர் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததை அடுத்து, அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் மும்பை பிம்ப்ரி – சின்ச்வாட் போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் கூற்றுப்படி, குற்றச்சாட்டப்பட்ட அந்த நபர் தனது வீட்டில் வைத்து மகளை 15 நாட்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அது மட்டுமின்றி கடந்த வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் தனது வீட்டின் அருகிலுள்ள காலியான கியோஸ்க்கு அழைத்து சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இது குறித்து திகி காவல்நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கூறுகையில், கைது செய்யப்பட்ட நபர் தனது கார்களை பல்வேறு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டு வருமானம் ஈட்டுபவர் என்றும், புகார் கொடுத்தவர் அவரது மனைவி என்றும் கூறியுள்ளார். அதனையடுத்து சனிக்கிழமையன்று குற்றச்சாட்டப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இந்திய தண்டனை சட்டமான 376,376(2) (f) பிரிவுகளின் கீழ் 3,4,7 ஆகிய பிரிவுகளையும், போக்ஸோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…