தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் 4 வயது மகளை கொலை செய்த தந்தை!

Published by
Rebekal

தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் 4 வயது மகளை கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கசியபாத்தில் 28 வயதான வாசுதேவ் தனது மனைவி குப்தா, 4 வயது மகள் மற்றும் 3 வயது மகனுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றக்கூடிய வாசுதேவுக்கும் அவரது மனைவி குப்தாவுக்கும் இடையில் அண்மையில் சண்டை வந்துள்ளது. வாக்குவாதம் வலுக்கவே குப்தா தனது 3 வயது மகனை தன்னுடன் அழைத்துக்கொண்டு எங்கேயோ சென்றுவிட்டார். எனவே அவர்களின் 4 வயது மகள் வாசுதேவுடன் இருந்துள்ளது.

மனைவியை காணவில்லை என வாசுதேவ் மன அழுத்தத்தில் இருந்த நிலையில், அவர்களின் மகளும் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் அழுகையை நிறுத்தாததால் கோவத்தில் கழுத்தை நெரித்து குழந்தையை கொலை செய்துள்ளார். அதன் பின் குழந்தையின் சடலத்துடன் மனைவியை தேட துவங்கியுள்ளார். இந்நிலையில் குப்தாவின் சகோதரன் அவர்களின் வீட்டிற்கு சென்று பார்த்து யாரும் இல்லாததால் வாசுதேவுக்கு போன் செய்துள்ளார்.

அப்பொழுது அவர் குழந்தையை கொலை செய்துவிட்டு குப்தாவை தேடுவதாக கூறியதை அடுத்து அதிர்ச்சியடைந்த குப்தாவின் சகோதரர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். போலீசார் வாசுதேவை உடனடியாக கைது செய்து அவரை விசாரித்ததில், ஏற்கனவே மனைவியை காணவில்லை என மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தொடர்ச்சியாக குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். அவரை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

48 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago