விபத்தில் மகன் உயிரிழந்த பின் இளம் வயதில் விதவையான தனது மருமகளுக்கு சீதனத்தை அள்ளி கொடுத்து மறுமணம் செய்து வைத்து நெகிழவைக்கும் மாமனார்.
இளம் வயதில் கணவனை இழந்த பெண்கள் பல இடங்களில் மாமியார் மாமனாருக்கு வாழ்நாளை வேலை செய்தே கழிக்கின்றனர். ஆனால், ஆண்கள் தங்கள் மனைவியை இழந்துவிட்டால் உடனடியாக மறுமணம் செய்து வைத்துவிடுவார்கள், பெண்களுக்கு அந்த சுதந்திரம் இன்று வரையிலும் பல இடங்களில் கிடைக்கவில்லை என்று தான் சொல்லியாக வேண்டும். ஆனால், மத்யப்ரதேசத்தில் மாமனார் ஒருவர் தனது மருமகளுக்கு செய்து வைத்துள்ள மறுமணம் பலரையும் நெகிழ வைக்கிறது.
ஆம், மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்துவரக்கூடிய ரவிசங்கர் என்பவரது மகன் சஞ்சய் சரிதா எனும் பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் ரவியின் மகன் ஒரு விபத்தில் உயிரிழந்தார். இதனால் அவரது மருமகள் இளம் வயதில் விதவையாக்கப்பட்டுவிட்டாலே எனும் வருத்தத்தில் இருந்த சரிதாவின் மாமனார், அப்பெண்ணின் குடும்பத்தார் சம்மதத்துடன் மணமகன் தேட ஆரம்பித்துள்ளார்.
அப்பொழுது ஏற்கனவே தனது மனைவியை இழந்து மருமணத்திற்காக காத்திருந்த ராஜேஷ் சோனி என்பாரை கண்டறிந்து, அவர் சம்மதம் தெரிவிக்கவே அனைவர் சம்மதத்துடனும் திருமணத்தை ரவி நடத்தி வைத்துள்ளார். ஆனால், சாதாரணமாக இல்லை கார், கழுத்து நிறைய நகைகள் மற்றும் ரொக்க பணம் என அள்ளிக்கொடுத்து தனது மருமகளுக்கு கவுரவமாக திருமணத்தை நடத்தி வைத்துள்ளார் ரவி. மாமனாரின் இந்த நெகிழ்ச்சியான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும்…
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…