விபத்தில் மகன் உயிரிழந்த பின் இளம் வயதில் விதவையான தனது மருமகளுக்கு சீதனத்தை அள்ளி கொடுத்து மறுமணம் செய்து வைத்து நெகிழவைக்கும் மாமனார்.
இளம் வயதில் கணவனை இழந்த பெண்கள் பல இடங்களில் மாமியார் மாமனாருக்கு வாழ்நாளை வேலை செய்தே கழிக்கின்றனர். ஆனால், ஆண்கள் தங்கள் மனைவியை இழந்துவிட்டால் உடனடியாக மறுமணம் செய்து வைத்துவிடுவார்கள், பெண்களுக்கு அந்த சுதந்திரம் இன்று வரையிலும் பல இடங்களில் கிடைக்கவில்லை என்று தான் சொல்லியாக வேண்டும். ஆனால், மத்யப்ரதேசத்தில் மாமனார் ஒருவர் தனது மருமகளுக்கு செய்து வைத்துள்ள மறுமணம் பலரையும் நெகிழ வைக்கிறது.
ஆம், மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்துவரக்கூடிய ரவிசங்கர் என்பவரது மகன் சஞ்சய் சரிதா எனும் பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் ரவியின் மகன் ஒரு விபத்தில் உயிரிழந்தார். இதனால் அவரது மருமகள் இளம் வயதில் விதவையாக்கப்பட்டுவிட்டாலே எனும் வருத்தத்தில் இருந்த சரிதாவின் மாமனார், அப்பெண்ணின் குடும்பத்தார் சம்மதத்துடன் மணமகன் தேட ஆரம்பித்துள்ளார்.
அப்பொழுது ஏற்கனவே தனது மனைவியை இழந்து மருமணத்திற்காக காத்திருந்த ராஜேஷ் சோனி என்பாரை கண்டறிந்து, அவர் சம்மதம் தெரிவிக்கவே அனைவர் சம்மதத்துடனும் திருமணத்தை ரவி நடத்தி வைத்துள்ளார். ஆனால், சாதாரணமாக இல்லை கார், கழுத்து நிறைய நகைகள் மற்றும் ரொக்க பணம் என அள்ளிக்கொடுத்து தனது மருமகளுக்கு கவுரவமாக திருமணத்தை நடத்தி வைத்துள்ளார் ரவி. மாமனாரின் இந்த நெகிழ்ச்சியான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென…
சென்னை : மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் மிகவும் ரசிகர்கள் எதிர்பார்கும்…
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் மாநில நிதிநிலை அறிக்கை 2025 2026 சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டது. அதனை…
டெல்லி : இன்று இந்திய ரயில்வே துறையின் சார்பாக காலியாக உள்ள 32,438 RRB லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்வு…