வீடு இல்லாததால் 2 ஆண்டுகளாக கழிவறையில் வாழ்ந்த குடும்பம்.
தெலங்கானா மாநிலம், மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பாலநகர் மண்டல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. இவரது கணவர் 7 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததையடுத்து, தனது 2 குழந்தைகள் மற்றும் மாமியாருடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பதாக தெலுங்கானாவில் பெய்த கனமழையின் போது அவரது வீடு இடிந்து விழுந்தது. இதன் காரணமாக இவர் அருகில் இருந்த சமுதாய கூடத்தில் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியாருடன் தஞ்சமடைந்தார். சமுதாய கூடத்தில் இருந்து சில நாட்களில் வெளியேறுமாறு கூறிய நிலையில், வசிப்பதற்கு இடம் இன்றி தவித்து வந்த சுஜாதா சுஜாதா அதே பகுதியில் அரசு கட்டிய பொது கழிப்பறையை வீடாக மாற்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், தனது நிலை குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது நானும் எனது மாமியாரும் கழிப்பறைக்கு வெளியே தூங்குவோம் .இரண்டு குழந்தைகளும் கழிப்பறைக்கு உள்ளே தூங்குவார்கள். மழை பெய்யும் காலங்களில் குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு நாங்கள் தூங்கவே மாட்டோம். எங்கள் நிலைமை யாருக்கு புரியும் என கண்ணீர் மல்க தெரிவித்தார். இதனையடுத்து சுஜாதாவின் நிலையை அறிந்த பஞ்சாயத்து நிர்வாகம் அவருக்கு அவர் வசித்துவந்த கழிப்பறைக்கு அருகில் வீடு கட்டி கொடுப்பதற்கு முன் வந்துள்ளது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…