கொரோனாவிற்கு பயந்து ஒன்றரை வருடமாக வீட்டை விட்டு வெளியே வராத குடும்பம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு, பலர் மீண்டு வந்திருந்தாலும், பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த வைரஸானது, மக்கள் மத்தியில் உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், சீனிவாசலு என்ற விவசாயி, தனது மனைவி, ஒரு மகன் மற்றும் 2 மகள்களுடன் கூடாரம் அமைத்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் கொரோனாவிற்கு பயந்து ஒன்றரை வருடமாக வெளியே வராமல் இருந்துள்ளனர். வீட்டிற்கு தேவையானவற்றை அவரது மகன் மட்டும் வாரத்திற்கு ஒருமுறை வெளியே சென்று வாங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீட்டுமனை பட்டா அளிப்பதற்காக, வட்டாட்சிய அலுவலக ஊழியர்கள் அங்கு சென்றனர். ஆனால், அதனை பெற்றுக் கொள்ள அவர்கள் கூடாரத்தை விட்டு வெளியே வரவில்லை. இதனையடுத்து, அவர்களை போலீசார் உதவியுடன் வெளியே அழைத்த வந்துள்ளனர். குடும்பத்தார் அனைவரும், மெலிந்த நிலையில், உடல்குன்றிய நிலையில் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, போலீசார் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…