நிர்பயா வழக்கின் தூக்கு தண்டனை மீண்டும் தள்ளி போனது !

Published by
murugan
  • நிர்பயா வழக்கின் குற்றவாளி 4 பேருக்கு தூக்கு தண்டனையை வழங்கப்பட்டது.
  • குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து உள்ளார்.அந்த விசாரணை 17-ம் தேதி வரவுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி டெல்லியில் ஒரு மருத்துவ மாணவியை  ஓடும் பேருந்தில்  6 பேர் கொண்ட  ஒரு கும்பம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில்  ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களின் நடத்திய விசாரணையில் 6 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதால் அவர்களில் 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். அந்த  5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் மற்ற 4 பேரும் தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையிடு செய்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் 4 பேருக்கு  தூக்கு தண்டைனையை உறுதிசெய்தது. இதனால் தூக்குப் போடுவதற்கான வாரண்ட்டும் கொடுக்கப்பட்டது. சட்டப்படி கருணைமனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும். இதனால் வருகின்ற 16 ம் தேதி தூக்கு தண்டனை வழங்க வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்டது.

தூக்கு தண்டனை நிறைவேற்றும் பணிகள் தீவிரமாக வருகிறது.இந்த நிலையில் நான்கு பேரில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட  தூக்கு தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு மீது  விசாரணை வருகின்ற 17-ம் தேதி மூன்று பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. இதனால் தூக்கு தண்டனை  தள்ளிப்போனது.

Published by
murugan

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

8 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

8 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

8 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago