அமலாக்கத்துறை இன்று வரை சிதம்பரத்தை கைது செய்ய தடை

Default Image

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக டெல்லி  உயர் நீதிமன்றத்தில்  முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது .ஓன்று  சிபிஐக்கு எதிராகவும்,அமலாக்கத்துறைக்கு எதிராகவும் தாக்கல் செய்யபப்பட்டது.ஆனால் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்த  நிலையில் சிபிஐக்கு எதிராக தாக்கல்  செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

நேற்று  நடைபெற்ற விசாரணையில் அமலாக்கத்துறை வழக்கில் விசாரணை நடைபெற்றது.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதாடினார்.அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடினார்.இரு தரப்பு வாதத்திற்கும் பின்னர்  ஐஎன்எக்ஸ்  மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை இன்று  காலை வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்