உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷமிம் என்ற முதியவர் தனது மனைவியுடன் ஹப்பூர் சாம்ரி கிராமத்தில் வசித்து வருகிறார். இவர்களின் வீட்டுக்கு இந்த மாதம் மின்கட்டணம் ரூ . 128, 45, 95,444 தொகை செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.
இவர்களின் வீட்டின் 2 கிலோவாட் மின் இணைப்புக்கு ரூ .128, 45, 95,444 மின் கட்டணமா? என ஷமிம் அதிர்ச்சியடைந்து உள்ளார்.தொழில்நுட்பக் கோளாறாக இருக்கும் என எண்ணி ஷமிம் இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் அந்தத் தொகையை செலுத்துமாறு கூறியுள்ளனர்.
இதுகுறித்து ஒரு செய்தி நிறுவனத்திடம் ஷமிம் கூறுகையில், எனது வேண்டுகோளை அதிகாரிகள் காது யாரும் கேட்க இல்லை. அவ்வளவு பெரிய தொகையை எப்படி கட்ட முடியும். நான் இது குறித்து புகார் கொடுக்க சென்ற போது மின் கட்டணத்தை கட்டினால் மின்சாரம் வழங்கப்படும் எனக் கூறி எங்கள் வீட்டு மின் இணைப்பைத் துண்டித்து விட்டனர் என கூறினார்.
இதுதொடர்பாக துணை மின் பொறியாளர் ராம் சரண் கூறுகையில், இது தொழில்நுட்பப் பிழையாக இருக்கலாம் அவர்கள் மின் கட்டண ரசீதைக் கொடுத்தால் கணினியில் சரி பார்த்து புதிய ரசீதை வழங்குவோம். இது போன்ற தொழில்நுட்பத் தவறுகள் நடப்பது இயல்புதான் என கூறினார்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…