கல்வியை பொறுத்தே நமது எதிர்காலம் அமையும் என்று புதிய கல்வி கொள்கை அமல்படுத்தி ஓராண்டு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
தேசிய கல்விக்கொள்கை கொண்டுவரப்பட்டு ஓராண்டு நிறைவையொட்டி, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக உரையாற்றினார். அவரது உரையில், புதிய கல்விக்கொள்கை மூலம் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம்.
எந்த இடத்துக்கு போனாலும் இந்த கால இளைஞர்கள் உச்சத்தை தொடும் வகையில் புதிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. புதிய கல்விக்கொள்கையில் படிப்பவர்கள் எதிர்காலத்தை மிக தெளிவாக தீர்மானித்து கொள்வார்கள். புதிய இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை மிக முக்கியமான பங்களிப்பை வழங்கும்.
நமது குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் கல்விமுறை தான் நமது நாட்டின் எதிர்காலம். நமது இளைஞர்கள் மாற்றத்திற்காக முழுமையான அளவில் தயாராக இருக்கிறார்கள். கல்வியை பொறுத்தே நமது எதிர்காலம் அமையும். புதிய கல்விக் கொள்கையை களத்திற்கு கொண்டு வர பலர் கடுமையாக பணியாற்றி உள்ளனர்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு நமது இளைஞர்கள் புதிய திசையை காட்டுகின்றனர். தேசத்தை கட்டமைப்பதில் புதிய கல்விக்கொள்கை மிகப்பெரிய பங்காற்றுகிறது. புதிய கல்விக்கொள்கை மிகப்பெரிய தொலைநோக்கு திட்டம் என்றும் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…