Andhra Pradesh - Boy Collapses [file image]
சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுவன் (சாய்) சுயநினைவை இழந்து மயக்கமடைந்தான். பின்னர் அந்த சிறுவனை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்தனர்.
அதிர்ஷ்டவசமாக, அந்த வழியாக ரவளி என்ற சென்ற பெண் மருத்துவர், தயக்கமின்றி அந்தச் சிறுவனுக்கு சாலையில் படுக்க வைத்து சிபிஆர் (CPR) செய்தார். CPR என்றால், ஒருவருக்கு இதய சுவாச முடக்கம் ஏற்பட்ட முதல் ஆறு நிமிடங்களுக்குள் செய்யப்படும் cardio pulmonary resucitation எனும் முதல் உதவி தான்.
மருத்துவர் ரவளி சரியான நேரத்தில் தலையிட்டு, CPR சிகிச்சை செய்ததால் அந்த சிறுவனின் சுய நினைவு திரும்பியது. பின்னர் மேல் சிகிச்சைக்காக குழந்தை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்பொழுது, சிறுவன் குணமடைந்து தற்போது நலமுடன் உள்ளார்.
மருத்துவர் ரவளி CPR செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.ரவளியின் இந்த செயல் சமூக வலைதளங்கள் முழுவதும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுள்ளது.
சென்னை : குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, ஈரோடு,…
வாஷிங்டன் : கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலம் மூலம்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 9 பெட்டிகளில் சுமார்…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…