#Breaking:வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு – அரசு அவசர அறிவிப்பு!

Published by
Edison

டெல்லி:கொரோனா பரவலை தடுக்க வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.இதற்கிடையில் ஒமைக்ரான் தொற்று பரவலும் வேகமாகப் பரவி வருகிறது.இதன்காரணமாக,கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி,சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில்,கொரோனா பரவலை தடுக்க வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.எனினும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக,டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில்: “டெல்லியில் கடந்த 8-10 நாட்களில் சுமார் 11,000 கொரோனா நேர்மறை வழக்குகள் பதிவாகியுள்ளன.அதில் சுமார் 350 நோயாளிகள் மருத்துவமனையில் உள்ளனர் என்றும்,124 நோயாளிகளுக்கு மட்டுமே ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது மற்றும் 7 பேர் வென்டிலேட்டரில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்,கொரோனா பரவலைத் தடுக்க சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் டெல்லியில் ஊரடங்கு உத்தரவை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.எனவே,அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோர் தவிர அனைத்து அரசு அதிகாரிகளும் வீட்டில் இருந்தே பணியாற்றுவார்கள் எனவும்,தனியார் அலுவலகங்களில் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

1 min ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

22 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

25 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

1 hour ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

1 hour ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago