பாரத் பயோடெக்கின் சொட்டு மருந்து வடிவிலான தடுப்பூசி..!

Published by
Edison

பாரத் பயோடெக்கின் மூக்குவழியாக செலுத்தும் சொட்டு மருந்து வடிவிலான தடுப்பூசியின் 2 மற்றும் 3 கட்ட பரிசோதனையை டெல்லி எய்ம்ஸ் விரைவில் மேற்கொள்ள உள்ளது.

கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் சொட்டு மருந்து வடிவிலான தடுப்பூசியின் 2 மற்றும் 3 ஆம் கட்ட சோதனைகள், டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) “ஓரிரு வாரங்களுக்குள்” தொடங்கும் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் பிபிவி154 (BBV154) இன்ட்ரானசல் தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட சோதனைகளை நடத்துவதற்கான ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பெற்றது.

இந்த இரண்டு நிலைகளுக்கும், எய்ம்ஸ் நெறிமுறைக் குழுவின் கட்டாய அனுமதி தேவை, இதற்காக ஏற்கனவே விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி,எய்ம்ஸின் ஒப்புதலைப் பெற்றவுடன், இரண்டு வாரங்களுக்கு இடையில் நான்கு வார இடைவெளியில், தன்னார்வலர்களுக்கு இரண்டு டோஸ் செலுத்தப்படும்.

இத்தகைய சோதனைகள் டாக்டர் சஞ்சய் ராய் தலைமையில் நடைபெறும். இரண்டாவது கட்டம் முழுமையாக முடிந்த பின்னரே மூன்றாவது கட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,பிபிவி154 நாட்டில் மனித சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி மருந்து என்பது குறிப்பிடத்தக்கது. பயோடெக்னாலஜி துறை (DBT) மற்றும் பயோடெக்னாலஜி இன்டஸ்ட்ரி ரிசர்ச் அசோசியேட் கவுன்சில் (BIRAC) ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த சோதனைகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16 அன்று தொடங்கியது.அதன் 3 வது கட்ட மருத்துவ பரிசோதனைகளில், கோவாக்சின் கொரோனா அறிகுறிகளுக்கு எதிராக 77.8% மற்றும் நோயின் கடுமையான  தாக்கத்திற்கு எதிராக 93.4% செயல்திறனை வெளிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

இந்திய மகளிர் அணி படுதோல்வி..! 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த நியூஸிலாந்து!

இந்திய மகளிர் அணி படுதோல்வி..! 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த நியூஸிலாந்து!

துபாய் : இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், நியூஸிலாந்து மகளிர் அணியும்…

10 hours ago

“முதலமைச்சர் கோப்பை., 11.53 லட்சம் வீரர்கள்., ரூ.35 கோடி பரிசு.,”  உதயநிதி பெருமிதம்.!

சென்னை : மாநில அளவில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இந்த…

14 hours ago

சவாலாக அமைந்த தென்னாபிரிக்க வீராங்கனைகள்! 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடரில் 3-வது போட்டியானது இன்று துபையில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

14 hours ago

இன்ஸ்டாவை மிஞ்சிய வாட்ஸ்அப்..! இந்த அம்சம் இங்கும் வரப்போகுது!

சென்னை : மெட்டா நிறுவனம் அடிக்கடி வாட்அப்பில் பயனர்களைக் கவர்ந்த இழுக்கும் வகையில், தொடர்ச்சியாக நல்ல அப்டேட்டுகளை கொண்டு வருகிறது.…

14 hours ago

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி பூஜையை வழிபடும் முறை.. !

சென்னை - சரஸ்வதி பூஜை கொண்டாடுவதன் நோக்கம் மற்றும் வித்யாரம்பம் செய்யும் முறையை பற்றி இந்த ஆன்மீக குறிப்பில் காணலாம் …

15 hours ago

தனித்தனியாக நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்.! பிரதமர் மோடி முதல் மு.க.ஸ்டாலின் வரை…

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…

15 hours ago