வெள்ளம் காரணமாக இறப்பு எண்ணிக்கை அசாமில் 107 ஆகவும் பீகாரில் 11 ஆகவும் உயர்ந்துள்ளது. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மற்றும் அசாம் ஆகிய இரண்டும் மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்றன. தற்போது பேரழிவு தரும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது.
பீகார்:
சமீபத்திய புதுப்பிப்புகளின்படி, கோசி உட்பட இங்குள்ள கிட்டத்தட்ட பெரிய ஆறுகள் மற்றும் அவற்றின் துணை நதிகள் மாநிலத்தில் நிரம்பி வழிகின்றன என்பதால் மாநிலத்தின் 38 மாவட்டங்கள் வெள்ளத்தினால் இதுவரை 38 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளம் தொடர்பான பல்வேறு சம்பவங்களில் மொத்தம் 11 பேர் உயிர் இழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர், மேலும் 19 நிவாரண முகாம்களில் 25,000 க்கும் மேற்பட்டோர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 5.7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைப் பராமரிக்க 989 சமூக சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கைகள் மாநில பேரிடர் மறுமொழிப் படை மற்றும் தேசிய பேரிடர் மறுமொழிப் படை கொண்டு இந்த மீட்டு பணியில் குறைந்தது 22 அணிகளை நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய விமானப்படை பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கி உதவி வருகிறது.
இதற்கிடையில், அசாமில் இதுவரை 107 பேர் வெள்ளத்தில் இறந்துள்ளனர். அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்படி, மாநிலத்தின் 33 மாவட்டங்களில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 208 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன மேலும்,மாநிலத்தில் கிட்டத்தட்ட 93,000 ஹெக்டேர் பயிர் இன்னும் நீரில் மூழ்கியுள்ளது.
வெள்ளம் மற்றும் கொரோனா தவிர, நிலச்சரிவுகளுடன் அம்மாநிலம் போராடி வருகிறது. மே மாதத்திலிருந்து, இங்கு பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் குறைந்தது 26 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…