கொரோனா ஊரடங்கு காரணமாக அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2020 முதல் அகவிலைப்படி (டிஏ) உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
அதன்பின்னர்,2019 ஆம் ஆண்டு இறுதியில் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி 17 சதவீதமாக இருந்தது.பின்னர்,2020 ஜனவரியில் 4 சதவீதமும், ஜூனில் 3 சதவீதமும்,2021 ஜனவரியில் 4 சதவீதமும் என மொத்தம் 11 சதவீதம் உயர்த்தப்பட்டது.இருப்பினும், இந்த மூன்று தவணைகளும் இதுவரை செலுத்தப்படவில்லை.
இந்நிலையில்,மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி காத்திருந்த ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.அதாவது,ஜூலை 1 முதல் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி அதிகரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,
மேலும்,இதுகுறித்து,ஜே.சி.எம் தேசிய கவுன்சிலின் பணியாளர் நல செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில்: “மத்திய அரசு ஊழியரின் டி.ஏ.ஆனது தற்போதுள்ள 17 சதவீதத்திலிருந்து ,குறைந்தபட்சமாக 28 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏனெனில்,ஏழாவது ஊதியக்குழுவை அமல்படுத்தும்போது 7 வது சிபிசி பொருத்துதல் காரணி 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது,
எனவே,ஊழியரின் மாதாந்திர அடிப்படை சம்பளம் மற்றும் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) போன்ற மாத பங்களிப்பு ஜூலை முதல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்,ஏழாவது ஊதிய கமிஷன் பொருத்துதல் காரணியை,அடிப்படை சம்பளத்தை பொருத்துதல் காரணியுடன் பெருக்கி,அதாவது,ஒரு மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ .18,000 என்றால், அவரது சம்பளம் 18,000 x 2.57 = ரூ. 46,260 ஆகும்.எனவே,அந்த வகையில் மாதாந்திர அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்படும்”,என்று கூறினார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…