சென்னை- மைசூர் வரை செல்லும் நாட்டின் 5ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நவ-10 ஆம் தேதி தொடங்கியிருக்கிறது.
நாட்டின் 5ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தென்னிந்தியாவில் முதல் முறையாக அறிமுகமாகிறது. சென்னை, பெங்களூரு மற்றும் மைசூர் வரை 483 கிமீ தூரம் செல்லும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் நவம்பர் 10 இல் கொடியசைத்து துவங்கப்பட இருக்கிறது.
மூன்றாவது மற்றும் நான்காவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வே சமீபத்தில் குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசங்களிலிருந்து அறிமுகப்படுத்தியது. நேற்று வியாழக்கிழமை நான்காவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் உள்ள அம்ப் அண்டௌரா ரயில் நிலையத்திலிருந்து பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ரயில் உனா, சண்டிகர் மற்றும் புது டெல்லி இடையே பயண நேரத்தை குறைக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டது. வந்தே பாரத் 2.0 ரயில்களில், முந்தைய ரயில்களில் இல்லாத ‘கவாச்’ எனப்படும் ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு (TCAS) பொருத்தப்பட்டுள்ளது. மூன்று மணிநேர பேட்டரி பேக்அப் கொண்ட பேரழிவு விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது. ரயிலின் வெளிப்புறத்தில் எட்டு பிளாட்ஃபார்ம் பக்க கேமராக்கள் உள்ளன. மேலும் தானியங்கி குரல் பதிவு அம்சத்துடன், பயணிகள்-பாதுகாப்பு தகவல் தொடர்பு வசதியும் பெட்டிகளில் பொருத்தப்பட்டு உள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…