நாட்டின் பொருளாதாரம் தான் கவலை அளிக்கிறது-சிறைக்கு செல்வதற்கு முன் சிதம்பரம் பதில்

Default Image

நாட்டின் பொருளாதாரம் தான் கவலை அளிக்கிறது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நேற்று ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ,முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவரை திகார் சிறைக்கு கொண்டு செல்ல சிபிஐ அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர்.அந்த சமயத்தில் அங்கிருந்த செய்தியாளர்கள் சிதம்பரத்திடம்  சிறைக்கு போவது கவலை அளிக்கிறதா என்ற கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு சிதம்பரம் பதில் கூறுகையில் ,சிறைக்கு செல்வத்தைப்பற்றி கவலைப்படவில்லை ,நாட்டின் பொருளாதாரம் தான் கவலை அளிக்கிறது  என்று பதில் அளித்து சென்றுவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்