#LIVE: நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியது..பிரதமர்..!

Default Image

கொரோனா காலகட்டத்தில் ஏழாவது முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். டெல்லியில் இருந்து காணொலி மூலம் பிரதமர் உரையாற்றி வருகிறார்.

  • கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு முழுமையாக போகவில்லை என்பதை மக்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பொது முடக்கம் முடிவுக்கு வந்தாலும் கொரோன வைரஸ் இன்னும் முற்றிலும் போய்விடவில்லை, ஊரடங்கு காலம் முடிந்து பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.
  • கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அலட்சியம் காட்டாமல் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
  • நாடு முழுவதும் பரிசோதனைக்கு 2,000 ஆய்வகங்களும், சிகிச்சைக்கு பல லட்சம் மையங்களும் உள்ளன.
  •  நம் நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவது கண்டு பலர் முககவசம் அணியாமல் அலட்சியமாக நடந்து கொள்வதைக் காண்கிறோம்.
  • பண்டிகை காலத்தை முன்னிட்டு நாம் அனைவரும் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
  • தடுப்பூசி கண்டறியப்பட்டு, வினியோகிக்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்.
  • அமெரிக்காவை விட நம் நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.
  • மருத்துவர்கள் செவிலியர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
  • கொரோனாவை வேரோடு வீழ்த்தும் வரை அதற்கு எதிரான இந்தியர்களின் போராட்டம் முடிவடையாது.
  • இந்தியா மேற்கொண்ட அதிக அளவிலான பரிசோதனை இந்தப் போரில் முக்கிய ஆயுதமாக இருந்தது.
  • கொரோனா சிகிச்சைக்கு இந்தியாவில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதால் அச்சப்படத் தேவையில்லை.
  • அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தயாராக உள்ளது.
  • கொரோனாவுக்கு எதிரான போர் நீண்டகாலம் நீடிக்கக்கூடியது.
  • எப்போதெல்லாம் பொதுவெளியில் செல்கிறோமா அப்போதெல்லாம் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்