‘நாட்டிற்கு அவர் தேவை’:50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை ராகுல் காந்திக்கு எழுதி வைத்த 78 வயது மூதாட்டி!

Published by
Edison

உத்தரகாண்ட்:டேராடூனில் வசிக்கும் புஷ்பா முன்ஜியால் என்ற மூதாட்டி,காங்கிரஸ் தலைவரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதாக கூறி,ராகுல் காந்தியின் பெயருக்கு வீடு, தங்க ஆபரணங்கள் உட்பட தனது முழு சொத்தையும் எழுதி வைத்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த 78 வயது மூதாட்டியான புஷ்பா முன்ஜியால்,50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள்,10 டோலா தங்கம் உட்பட தனது சொத்துக்கள் அனைத்தையும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பெயரில் வைத்துள்ளார்.புஷ்பா முன்ஜியால்,டேராடூன் நீதிமன்றத்தில்,தனது சொத்துக்களின் உரிமையை நேற்று ராகுல் காந்திக்கு அளித்து உயிலை தாக்கல் செய்துள்ளார்.

சொத்து எழுதி வைக்க இதுதான் காரணம்:

இதற்கான காரணம் குறித்து புஷ்பா முன்ஜியால் கூறுகையில்,”இந்திரா காந்தியும்,ராஜீவ் காந்தியும் இந்த நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஒருமைப்பாட்டிற்காகவும் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.அந்த வகையில்,தற்போது சோனியா காந்தியும்,ராகுல் காந்தியும் தேச சேவைக்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர்.

மேலும்,ராகுல் காந்தி மற்றும் அவரது யோசனைகள் நாட்டுக்கு அவசியம் எனவேதான்,ராகுல் காந்தியின் எண்ணங்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.அதனால்தான் எனது சொத்துக்களை அவருக்கு வழங்குகிறேன்”,என்று புஷ்பா முன்ஜியால் கூறியுள்ளார்.

இதனையடுத்து,உத்தரகாண்ட் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் பிரீதம் சிங்கின் வீட்டில் வைத்து புஷ்பா முன்ஜியால் தனது சொத்துக்களுக்கான ஆவணங்களை வழங்கினார்.

காங்கிரஸ் தோல்வி:

உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 70 தொகுதிகளில் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.ஆனால்,பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று புஷ்கர் சிங் தாமி முதல்வராக பதவியேற்றது.

டெல்லியில் பிரதமர் இல்லை:

இதனிடையே,உத்தரகாண்ட் மாநிலத்தில் ராகுல் காந்தி பல பேரணிகளை நடத்தினார்.அவ்வாறு நடைபெற்ற ஒரு பேரணியின் போது ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை ‘ராஜா’ என்று குறிப்பிட்டு தாக்கினார்.அதாவது “டெல்லியில் பிரதமர் இல்லை.டெல்லியில் ஒரு ராஜா அமர்ந்திருக்கிறார்.அப்படியொரு அரசு எங்களுக்கு வேண்டாம். ஏழைகள், விவசாயிகள்,சிறுதொழில் செய்பவர்கள்,எம்எஸ்எம்இ-யில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் இளைஞர்கள்,மக்களுக்கு வேலை வழங்கும் அரசுதான் எங்களுக்கு வேண்டும்.” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்,ராகுல்காந்தியின் யோசனைகள் நாட்டுக்கு அவசியம் எனக்கூறி உத்தரகாண்ட் மூதாட்டி தனது சொத்துக்களை ராகுல்காந்தி பெயருக்கு மாற்றியுள்ளார்.

Recent Posts

“இதுக்கா என் படத்தை வேணாம்னு சொன்னீங்க”…வைரலாகும் விடாமுயற்சி மீம்ஸ்கள்!

“இதுக்கா என் படத்தை வேணாம்னு சொன்னீங்க”…வைரலாகும் விடாமுயற்சி மீம்ஸ்கள்!

அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…

5 minutes ago

படித்துவிட்டு போராட்டம் பண்ணுங்க..ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அட்வைஸ்!

டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…

41 minutes ago

INDvENG : தடுமாறிய இங்கிலாந்து…சுருட்டிய இந்தியா..டார்கெட் இதுதான்!

மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…

1 hour ago

திமுகவின் ‘சமூக நீதி’ வேடம் கலைகிறது? தவெக தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது  பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…

2 hours ago

INDvENG : இந்திய மண்ணில் முதல் அரை சதம்…சாதனைகளை குவித்த ஜாஸ் பட்லர்!

மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…

2 hours ago

‘சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்ஸ்’! பாதுகாப்பு படை தலைவர் போட்ட பதிவு!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…

3 hours ago