விண்ணில் பாய தயாரான சந்திராயன்-3.! இன்று மதியம் கவுண்ட்டவுன் ஆரம்பம்…

ISRO chandrayan 3

இன்று மதியம் 1 மணிக்கு சந்திராயன் 3  விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கான கவுண்ட்டவுன் ஆரம்பமாகவுள்ளன.

நாளை இந்தியா ஒரு பெருமை மிகு தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது என்றே கூற வேண்டும். நாளை சந்திராயன்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. அதற்கான பரிசோதனை, சோதனை ஓட்டம் என அனைத்தும் நிறைவடைந்து எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்றன. கடந்த முறை செய்த சிறு தவறுகளையும் தற்போது தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவி கொண்டு அதனை சரி செய்து மேம்படுத்தி புதிய உத்தியோகத்துடன் விண்ணில் பாய சந்திராயன்-3 தயாராகிவிட்டது.

இந்த சந்திராயன்-3 விண்கலத்தில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன ஒன்று புரபுல்சன் பகுதி மற்றொன்று ரோவர் மற்றும் லேண்டர் பகுதி இதில் புரபுல்சன் பகுதி ரோவர் மற்றும் லேண்டர் பகுதியை நிலவின் 100 கிலோமீட்டர் தொலைவிற்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு லேண்ட் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கப்படும். ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவி ஆகும். இந்த மூன்று பகுதிகளுக்கும் இடையேயான ரேடியோ அலைவரிசைகளை பரிசோதிக்கப்பட்டு உள்ளது. இதற்கான 251/2 மணி நேரம் கவுண்டவுன் இன்று பகல் ஒரு மணிக்கு துவங்க உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் உள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து நாளை இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திராயன்-3 விண்வெளி ஆய்வுக்காக விண்ணில் ஏவப்பட உள்ளது. இது இந்தியாவை உலக அரங்கில் விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சொல்லும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்