ஆம்புலன்ஸிற்கு காத்திருக்காமல் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஆட்டோவில் எடுத்து சென்ற அவலம்.!

Published by
Ragi

கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை ஆம்புலன்ஸிற்கு காத்திருக்காமல் உறவினர் ஆட்டோவில் ஏற்றி சென்ற அவலம் சம்பவத்தால் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவில் நிஜாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதனையடுத்து அவரது உடலை உறவினர்கள் ஆட்டோவில் கொண்டு சென்றுள்ளனர். இந்த அவல சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையின் டாக்டர் என். ராவ் விளக்கமளித்து பேசியுள்ளார். கொரோனாவால் உயிரிழந்தவரின் உறவினர் மருத்துவ ஊழியர் என்றும், அவரது உடலை தரும்படி உறவினர் கேட்ட போது, ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியதாகவும், ஆனால் அந்த உறவினர் ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் ஆட்டோவில் உயிரிழந்தவரின் உடலை ஏற்றி சென்றதாக தெரிவித்துள்ளார். இது குறித்த விசாரணை அவரிடம் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்

Recent Posts

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

6 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

8 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

10 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

10 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

11 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

12 hours ago