Categories: இந்தியா

பரபரக்கும் மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்.! 3 எம்எல்ஏக்கள் ‘திடீர்’ ராஜினாமா.!

Published by
மணிகண்டன்

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு அம்மாநிலத்தில் மராத்தா மக்கள் நீண்ட வருடமாக போராடி வருகின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் 10 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து 16 சதவீத இடஒதுக்கீடு மராத்தா மக்களுக்கு அளிக்கப்பட்டது.

ஆனாலும், இந்த 16 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதன் பிறகு அந்த இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்து இருந்தது. இது மராத்தா சமூக மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியது. அடுத்ததாக பல்வேறு முறை அரசுக்கு கோரிக்கை வைத்தும், இடஒதுக்கீடு அறிவிக்கப்படாமல் இருந்தது.

ராஜமுந்திரி மத்திய சிறையில் இருந்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விடுதலை.!

இதனை தொடர்ந்து மராத்தா சமூக செயற்பாட்டாளர் மானோஜ் ஜாரங்கே கடந்த ஆகஸ்ட் மாதம் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இது மாநிலத்தின் பல்வேறு பகுதியில் பரபரப்பை உண்டாக்கியது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு பிறகு காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்கும் நிலைக்கு சென்றது. அதன் பின்னர், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே,  மானோஜ் ஜாரங்கேவிடம் பேசி, இடஒதுக்கீடு குறித்த போராட்டத்தை வாபஸ் பெற வைத்தார்.

இருந்தும், மராத்தா சமூகத்திற்க்கு இடஒதுக்கீடு அளிக்க,  மனோஜ் ஜாரங்கே கொடுத்த அக்டோபர் 24 என்ற காலக்கெடு முடிந்த காரணத்தால் , மீண்டும் போராட்டம் துவங்கியது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஏற்கனவே சிவசேனா (ஷிண்டே ஆதரவு) எம்பிக்கள் ஹேமந்த் பாட்டீல், ஹேமந்த் கோட்சே ஆகியோர் ராஜினாமா செய்து இருந்தனர்.

இதனை தொடர்ந்து, நேற்று, 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர் . வைஜாபூர் எம்எல்ஏ ரமேஷ் போர்னாரே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுரேஷ் வார்புட்கர் மற்றும் பாஜக எம்எல்ஏ லக்ஷ்மண் பவார் ஆகியோர் மராத்தா இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் ராஜினாமா செய்துள்ளனர்.

2 எம்.பிக்கள், 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா, போராட்டம் உள்ளிட்ட பரபரப்பான சூழலில், இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே  அழைப்பு விடுத்துள்ளார். இதில் இடஒதுக்கீடு பற்றி முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!

நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…

34 minutes ago

இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!

சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…

34 minutes ago

பாக்., வீரர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கலயா? சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு முன்னாள் வீரர் கடும் சாடல்.!

பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…

1 hour ago

39 தொகுதிகள் 31ஆக மாறும்! தமிழ்நாட்டின் குரல்வளை நசுக்கப்படும்! மு.க.ஸ்டாலின் அழைப்பு!

சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…

2 hours ago

தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா… தீயாக வேலை செய்யும் ஆனந்த் – ஆதவ் அர்ஜுனா.!

சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…

3 hours ago

அம்பேத்கரை விட மோடி பெரியவரா? கொந்தளித்த அதிஷி! சஸ்பெண்ட் செய்த சபாநாயகர்!

டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி  27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…

3 hours ago