பாரம்பரியமும், பன்முகத்தன்மையும் கொண்ட நம் நாட்டை இந்திய அரசியலமைப்பு ஒன்று சேர்க்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி அவர்கள், இன்றைய நாள் நாம் நாடாளுமன்றத்தை வழங்க வேண்டிய நாள். பல ஆலோசனைக்குப் பிறகு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய தலைவர்களுக்கு நாம் வணக்கம் தெரிவிக்க வேண்டிய நாளாக அரசியலமைப்பு தினம் உள்ளது.
இந்திய சுதந்திரத்துக்காக போராடிய மகாத்மா காந்தி மற்றும் சுதந்திர போராட்ட தலைவர்களுக்கும் நான் வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல் சாசனத்தை ஏற்படுத்திய இவர்களுக்கு நாடே முதன்மையாக இருந்தது. மேலும், நமது அரசியலமைப்பு பெரும் பாரம்பரியமும் பன்முகத் தன்மையும் கொண்டது. மேலும், நமது நாட்டை இந்திய அரசியல் அமைப்பு தான் ஒன்று படுத்துகிறது. பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நமது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டது என பிரதமர் பேசியுள்ளார்.
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…