மகாராஷ்டிராவில் வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நாளை பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது.
அண்மையில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.
இது தொடர்பாக, எதிர்ப்புத் தெரிவித்து நாளை மாலை 4 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் விவசாயிகளை காப்பாற்ற பேரணிகள் நடத்த அம்மாநில காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த பேரணியானது, மகாராஷ்டிரா மாநிலத்தின் சங்கம்னர், கோலாப்பூர், அவுரங்காபாத், அமராவதி, நாக்பூர் போன்ற நகர மையங்களிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் விவசாயிகளுக்கு நல்லதல்ல. மேலும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஒரு சிலருக்கு இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் வருவாய் அமைச்சர் பாலாசாகேப் தோரத் கூறினார்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் இணைய வசதியுடன் கிராமங்களுக்குச் செல்வார்கள். கிராமங்களில் ஒரே இடத்தில் விவசாயிகள் ஒன்று சேரும் பேரணிகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…