ராகுல்காந்திக்கு சிறை தண்டனை.! எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு.! டெல்லியில் பேரணி.!

Default Image

டெல்லில் இன்று எதிர்கட்சிகளை ஒன்றாக இணைத்து பேரணி நடத்த காங்கிரஸ் மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஒரு அரசியல் நிகழ்வில் பிரதமர் மோடியின் பெயரை தவறாக சர்ச்சைக்குரிய வகையில் குறிப்பிட்டதாக கூறி சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பின்னர் மேல்முறையீடு செய்ய எதுவாக ஜாமீனும் வழங்கியது.

ஆலோசனை கூட்டம் :

ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த விவகாரதிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே வீட்டில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சியினர் பேரணி :

இதனை தொடர்ந்து, இன்று டெல்லியில் பிரமாண்ட பேரணி நடத்த காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நாடு முழுவதில் இருந்து பல்வேறு கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று  தமிழக்தில் இருந்து திமுக, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொள்ள உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்