உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள்.. 5 பேரை பரிந்துரைத்த கொலீஜியம்..!

Published by
murugan

அலகாபாத், ராஜஸ்தான், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலிஜியம் இது தொடர்பான பரிந்துரைகளை நேற்று மாலை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

அதன்படி, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி அருண் பன்சாலியை நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா பரிந்துரைக்கப்பட்டார்.

ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி விஜய் பிஷ்னோய் கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி ஷீல் நாகு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர் சாரங்கி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பரிந்துரைக்கப்பட்டனர்.

1200க்கும் மேற்பட்ட தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி அருண் பன்சாலி:

உச்சநீதிமன்ற கொலீஜியம், நீதிபதி அருண் பன்சாலி மீதான பரிந்துரையில், “வழக்குகளை தீர்ப்பதன் மூலம் நீதித்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பொருத்தவரையில், ஏறக்குறைய பதினொரு ஆண்டுகள் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்துள்ளார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நீதி வழங்குவதில் பரந்த அனுபவம் பெற்றவர். அவர் திடமான சட்டத் திறன்களைக் கொண்ட ஒரு திறமையான நீதிபதியாகக் கருதப்படுகிறார். எனவே அவர் நாட்டின் மிக உயர்ந்த உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்படுவதற்கு சரியாக இருப்பார்.

நீதிபதி விஜய் பிஷ்னோய், ஏறக்குறைய பதினொரு ஆண்டுகள் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தில் 652 தீர்ப்புகளை வழங்கியுள்ளார். நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா தனது 14 ஆண்டுகளுக்கும் மேலான பதவிக் காலத்தில் 505க்கும் மேற்பட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

நீதிபதி பி.ஆர்.சாரங்கி 10 ஆண்டுகளுக்கும் மேலாக உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தில் 1056க்கும் மேற்பட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதே நேரத்தில், நீதிபதி ஷீல் நாகு, மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய காலத்தில் 499 தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

Recent Posts

GT vs MI : மாஸ் காட்டுவாரா ரோஹித்? டாஸ் வென்ற பாண்டியா பந்துவீச முடிவு.!

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…

15 minutes ago

தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?

அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட  X-ஐ, தனது சொந்த…

18 minutes ago

ஜிவி – அனி சம்பவம்.., ஆட்டம் போட வைக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் சிங்கிள்.!

சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…

1 hour ago

சினிமா சான்ஸ்… எங்கள் பெயரை சொல்லி மோசடி.! கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…

2 hours ago

உசிலம்பட்டி காவலர் கொலை வழக்கு : கஞ்சா வியாபாரி என்கவுண்டர்.!

மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…

2 hours ago

தோனியின் கண் முன்னே… கலீல் அகமதுவை தள்ளிவிட்ட விராட் கோலி.! வைரல் வீடியோ…

சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…

3 hours ago