கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்கவே மேகதாது அணை திட்டம் ..! கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார்
கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்கவே மேகதாது அணை திட்டம் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறுகையில், அதிக மழை பெய்யும் காலத்தில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்கவே மேகதாது அணை திட்டம்.இதனால் தமிழகத்திற்கும் பலனே .மேகதாது திட்டத்தின் பலன்கள் குறித்து கர்நாடக எம்பிக்களுடன் ஆலோசனை நடத்த டெல்லி வந்துள்ளேன் என்றும் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.