மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜன.25 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று CBSE வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் சுற்றறிக்கை போலியானது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் டேர்ம் 1 போர்டு தேர்வுகளை நடத்தியது.இந்நிலையில்,மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜனவரி 25 ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்படும் சுற்றறிக்கை போலியானது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதாவது,மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 25.01.2022 அன்று அறிவிக்கப்படும் என ஜனவரி 22 தேதியிட்ட வெளியான போலியான சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,சிபிஎஸ்இ (CBSE) தேர்வு முடிவுகளைப் பெறுவதற்கான செயல்முறையை மாற்றியுள்ளதாகவும், குறிப்பாக விண்ணப்பதாரர்கள் தங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை, “புதிய” இணைய போர்ட்டலில் உள்நுழைய பயன்படுத்தி அவர்களின் மதிப்பெண்களை சரிபார்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலயில்,சிபிஎஸ்இ நிர்வாகத்தால் வெளியிடப்பட்டதாக கூறப்படும் இந்த சுற்றறிக்கை போலியானது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…