சிறுத்தையிடம் சிக்கிய பேத்தியை மீட்க சிறுத்தையுடன் சண்டையிட்ட தாத்தா-பாட்டி.
மத்திய பிரதேசம் மாநிலம், போபாலில் குனோ தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள துரா கிராமத்தில் தாத்தா, பாட்டி மற்றும் அவர்களது பேத்தி ஆகியோர் தங்களது வீட்டில் தரையில் தூங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த சிறுத்தை தரையில் தூங்கி கொண்டிருந்த 2 வயது குழந்தையை வாயில் கவ்விக் கொண்டு சென்றுள்ளது.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த பாட்டி, சிறுத்தையின் தாடையில் குழந்தையின் வலது காலைக் கண்டு அலறி கத்தினார். குழந்தையை இழுத்து செல்ல முயன்ற சிறுத்தையை, பாட்டி உதைத்துள்ளார். பின் பாட்டி மற்றும் பேத்தியின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த, பேத்தியின் தாத்தாவான, ஜெய் சிங் குர்ஜார் சிறுத்தையின் மூக்கு மற்றும் கண்களில் உதைத்தார். பின் சிறுத்தை குழந்தையை விட்டுவிட்டது.
பின் அந்த சிறுத்தை குழந்தையின் தாத்தா மற்றும் பாட்டி இருவரையும் கடிக்க முயன்றுள்ளது. அதற்குள் சுற்றியுள்ள அக்கம்பக்கத்தினர் குச்சிகளுடன் வர, அது காட்டுக்குள் ஓடியுள்ளது. கர்ஹால் தொகுதியில் உள்ள துரா, குனோ தேசிய பூங்காவிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது எனது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, குனோ கோட்ட வன அலுவலர் பி.கே.வர்மா கூறுகையில், சம்பவத்திற்கு பிறகு அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு முறையான மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்வோம் என கூறியுள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…