கொரோனா சமூக பரவலாகியுள்ளதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் – மாநிலங்களவை எம்பி.!

Published by
Rebekal

கொரோனா வைரஸ் இந்தியாவில் சமூக பரவலாக உள்ளது என்பதை மத்திய அரசு ஒப்புக் கொள்ள வேண்டும் என சஞ்சய் சிங்க் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவிக் கொண்டே செல்வதால் அனைத்து நாடுகளிலும் இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் சமூக பரவலாக மாறி உள்ளது என்பதை  மத்திய அரசு ஒத்துக் கொள்ளவில்லை என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் கூறினார். இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறி உள்ளது என்பதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வைரசை கட்டுப்படுத்துவதில் டெல்லி தான் முன்னணியில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ள அவர், நோய்த்தொற்று எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவே தான் இந்த தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது. இதற்கு பெரிய அளவில் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் அதிக சோதனைக் கருவிகளை கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் ஒரு பில்லியனுக்கு 1,47,000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன நிலையில், ரஷ்யாவில் ஒரு மில்லியனுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் ஒரு மில்லியனுக்கு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் சோதனைகள் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் போதுமான அளவு சோதனை கருவிகள் இல்லை மற்றும் சோதனைகள் முறையாக நடத்தப்படவில்லை என்பது தெரிய வருகிறது. எனவே இந்த சமூக பரவலை கட்டுப்படுத்த விரைவில் அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

8 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

8 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

8 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

10 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

11 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

12 hours ago