கொரோனா சமூக பரவலாகியுள்ளதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் – மாநிலங்களவை எம்பி.!

Published by
Rebekal

கொரோனா வைரஸ் இந்தியாவில் சமூக பரவலாக உள்ளது என்பதை மத்திய அரசு ஒப்புக் கொள்ள வேண்டும் என சஞ்சய் சிங்க் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவிக் கொண்டே செல்வதால் அனைத்து நாடுகளிலும் இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் சமூக பரவலாக மாறி உள்ளது என்பதை  மத்திய அரசு ஒத்துக் கொள்ளவில்லை என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் கூறினார். இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறி உள்ளது என்பதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வைரசை கட்டுப்படுத்துவதில் டெல்லி தான் முன்னணியில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ள அவர், நோய்த்தொற்று எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவே தான் இந்த தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது. இதற்கு பெரிய அளவில் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் அதிக சோதனைக் கருவிகளை கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் ஒரு பில்லியனுக்கு 1,47,000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன நிலையில், ரஷ்யாவில் ஒரு மில்லியனுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் ஒரு மில்லியனுக்கு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் சோதனைகள் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் போதுமான அளவு சோதனை கருவிகள் இல்லை மற்றும் சோதனைகள் முறையாக நடத்தப்படவில்லை என்பது தெரிய வருகிறது. எனவே இந்த சமூக பரவலை கட்டுப்படுத்த விரைவில் அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

1 hour ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago