கொரோனா சமூக பரவலாகியுள்ளதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் – மாநிலங்களவை எம்பி.!

Default Image

கொரோனா வைரஸ் இந்தியாவில் சமூக பரவலாக உள்ளது என்பதை மத்திய அரசு ஒப்புக் கொள்ள வேண்டும் என சஞ்சய் சிங்க் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவிக் கொண்டே செல்வதால் அனைத்து நாடுகளிலும் இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் சமூக பரவலாக மாறி உள்ளது என்பதை  மத்திய அரசு ஒத்துக் கொள்ளவில்லை என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் கூறினார். இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறி உள்ளது என்பதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வைரசை கட்டுப்படுத்துவதில் டெல்லி தான் முன்னணியில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ள அவர், நோய்த்தொற்று எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவே தான் இந்த தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது. இதற்கு பெரிய அளவில் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் அதிக சோதனைக் கருவிகளை கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் ஒரு பில்லியனுக்கு 1,47,000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன நிலையில், ரஷ்யாவில் ஒரு மில்லியனுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் ஒரு மில்லியனுக்கு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் சோதனைகள் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் போதுமான அளவு சோதனை கருவிகள் இல்லை மற்றும் சோதனைகள் முறையாக நடத்தப்படவில்லை என்பது தெரிய வருகிறது. எனவே இந்த சமூக பரவலை கட்டுப்படுத்த விரைவில் அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்