“கேரளாவை கையை விரித்தது மத்திய அரசு” அரிசியை இலவசமாக கொடுக்க முடியாது..!!

Published by
Dinasuvadu desk

திருவனந்தபுரம்:

பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை எதிர்கொள்ள கேரள மாநிலத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்பட்ட 89ஆயிரத்து 540 மெட்ரிக் டன் அரிசி கிலோவுக்கு ரூ.26 என மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.

Image result for save kerala

இதுகுறித்து கே.கே.ராகேஷ் எம்பிக்கு மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் எழுதியுள்ள கடிதத்தில், சிறப்பு ஒதுக்கீட்டு அரிசியை இலவசமாக வழங்க முடியாது எனவும், மத்திய அரசின் கொள்கைப்படி குறைந்தபட்ச விலைக்கு மட்டுமே அரிசி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவின்மூலம் கேரளத்திற்கு 230 கோடி ரூபாய் அளவுக்கு செலவு ஏற்படும்.பெருவெள்ள பாதிப்பை கணக்கில் கொண்டு கேரளத்திற்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டுள்ளதாகவும், விலையை ஈடுசெய்வதா வேண்டாமா என்பது பின்னர் தீர்மானிக்கப்படும் என மத்திய அமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

பெருவெள்ளம் அதிக அளவில் கேரளத்திற்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அரிசியை இலவசமாக வழங்க வேண்டும் என கே.கே.ராகேஷ் அமைச்சர் பஸ்வானை கடிதம் மூலம் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கான பதில் தற்போது அனுப்பப்பட்டுள்ளது.தேசிய துயர்துடைப்பு நிவாரண நிதியிலிருந்து கேரளத்திற்கு அனுமதிக்கும் தொகையிலிருந்தோ, உணவு பாதுகாப்பு சட்டம் போன்ற மற்ற திட்டங்களிலிருந்தோ அரிசியின் விலை ஈடுசெய்யப்படும் எனவும் பஸ்வான் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச அடக்கவிலை ஈடுசெய்யப்படும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு கிலோ அரிசிக்கான குறைந்தபட்ச அடக்கவிலை ரூ.26ஆக உள்ளது.

DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

9 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

33 mins ago

“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….

சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

53 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்- முத்து மீனாவை கொல்ல துடிக்கும் சிட்டி.. விறுவிறுப்பான காட்சிகள்..!

சென்னை -சிறகடிக்க  ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து  தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…

56 mins ago

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…

1 hour ago

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

1 hour ago